வராஹாவதாரம் .
பிரமன் உலகு படைத்தற்காய் நேர
பெருவெள்ளம் பார்ஒளித்து நீரின் -- இருப்பமால்
கோல வராகமாய் கோட்டிடை மீக்கொணர்ந்தான்!
ஞாலத் துயிர்நடையல் என்று!
கஜேந்திர மோக்ஷம்.
பூக்கொய்து கூவி களிறு அழைப்பஅக்
கூக்குரல் கேட்டலும் தண்ணளி -- மீக்கொடு
ஓர்பறவை ஊர்ந்துவண் சக்கரக் கையான்!அன்
நீர்புழுவை மாய்பனே பாய்ந்து!
தத்தாத்ரேயர் அவதாரம் :
மறைநான்கும் நாயென மேவ மிளிர்கைகள்
ஆறும் வலம்புரி சங்காழி -- நேறும்!
உடுக்கையோடு சூலம் கமண்டலு மாலா
பிடித்தவதூ தர்கீதை ஓது!
நர-நாராயணாவதாரம்
எட்டெழுத்து மந்திரம்! பிறப்பறுத்துத் தந்திடும்!!
ஒற்றைச்சொல் ''ஓம்''இதன் கூற்றதாம் -- மற்றைசொல்!
நாரணன் தாமே குருவும்நல் சீடனாய்த்
தேர்ந்த வதரிமேல் வாக்கு!
ஹயக்கிரீவாவதாரம்.
செல்செல்வம் போலா கதேகல்வி! அக்கல்வி
அல்லா தவர்க்குநல்கி நீடுசெய்வான்! -- எல்லையில்
தொல்சீர் பரிமுகத்து ஞானப் பிரானவனே!
கல்லாதவ ராக்கும் கவி.
மோஹினி அவதாரம்.
அஞ்சிப் பிழைப்பராம் தேவரவர் வாணாளை
விஞ்ச வளர்ப்பான் கடைந்திட்ட -- அஞ்சுவை
ஆரமுதை ஆங்கு அசுரர்க் களவிடாதே
நேர்ந்திட்டான் பெண்ணுருக் கொண்டு!
ஹம்சாவதாரம்.
பொய்யா மறைவிரித்தான் ஆதி சதுமுகற்கு
உய்ய உலகு படைத்தற்காய் -- ஐயன்மால்!
அம்சிறகாள் அன்னமதாய் ஆற்றும் அவதாரம்
தம்சிறந்த நீர்மையுள் நின்று !
வியாஸாவதாரம்.
மறைநான்கும் முன்பின் எனவகுத்தான்! பன்னி
உரைத்தற்காய் பாரதம் கைசெய்து -- பாரில்
நெறிசெய் புராணம் அறுமூன்றும் ஈந்தமாலாய்த்
தேறும் வியாசர் வணங்கு!
புத்தாவதாரம்.
விரிசடை வானவர் ஈசன் திரிபுரம்
போரிடை புக்கு சிரிப்பான் -- எரித்த
புகழதும் மால்கள்ள வேடம் கொடுபுத்தன்
மோகமெழு வித்த விளைவு!
--கி. ஸ்ரீர. ஸ்ரீ.
பிரமன் உலகு படைத்தற்காய் நேர
பெருவெள்ளம் பார்ஒளித்து நீரின் -- இருப்பமால்
கோல வராகமாய் கோட்டிடை மீக்கொணர்ந்தான்!
ஞாலத் துயிர்நடையல் என்று!
கபிலாவதாரம்.
சாக்கிய யோக நெறிதந்து தாய்க்குத்தாம்
ஆக்கிய யாவும் அருள்குருவாய் -- வாக்கில்
உயர்முனி கீழுலகம் காக்கும் கபிலமுனி
தூயநெறி தந்தமால் ஓம்பு!
மத்ச்யாவதாரம்.
சத்ய விரதன் வியப்ப உலப்பிலா
சக்தி பெருகி கடல்சேர் -- உத்திசெய்மால்
மீன்எனப் போந்தனாய் ஊழிபுக ஓடமதை
தான்நல்கி காக்கும் உலகு!
கஜேந்திர மோக்ஷம்.
பூக்கொய்து கூவி களிறு அழைப்பஅக்
கூக்குரல் கேட்டலும் தண்ணளி -- மீக்கொடு
ஓர்பறவை ஊர்ந்துவண் சக்கரக் கையான்!அன்
நீர்புழுவை மாய்பனே பாய்ந்து!
தத்தாத்ரேயர் அவதாரம் :
மறைநான்கும் நாயென மேவ மிளிர்கைகள்
நர-நாராயணாவதாரம்
எட்டெழுத்து மந்திரம்! பிறப்பறுத்துத் தந்திடும்!!
ஒற்றைச்சொல் ''ஓம்''இதன் கூற்றதாம் -- மற்றைசொல்!
நாரணன் தாமே குருவும்நல் சீடனாய்த்
தேர்ந்த வதரிமேல் வாக்கு!
ஹயக்கிரீவாவதாரம்.
செல்செல்வம் போலா கதேகல்வி! அக்கல்வி
அல்லா தவர்க்குநல்கி நீடுசெய்வான்! -- எல்லையில்
தொல்சீர் பரிமுகத்து ஞானப் பிரானவனே!
கல்லாதவ ராக்கும் கவி.
மோஹினி அவதாரம்.
அஞ்சிப் பிழைப்பராம் தேவரவர் வாணாளை
விஞ்ச வளர்ப்பான் கடைந்திட்ட -- அஞ்சுவை
ஆரமுதை ஆங்கு அசுரர்க் களவிடாதே
நேர்ந்திட்டான் பெண்ணுருக் கொண்டு!
ஹம்சாவதாரம்.
பொய்யா மறைவிரித்தான் ஆதி சதுமுகற்கு
உய்ய உலகு படைத்தற்காய் -- ஐயன்மால்!
அம்சிறகாள் அன்னமதாய் ஆற்றும் அவதாரம்
தம்சிறந்த நீர்மையுள் நின்று !
வியாஸாவதாரம்.
மறைநான்கும் முன்பின் எனவகுத்தான்! பன்னி
உரைத்தற்காய் பாரதம் கைசெய்து -- பாரில்
நெறிசெய் புராணம் அறுமூன்றும் ஈந்தமாலாய்த்
தேறும் வியாசர் வணங்கு!
புத்தாவதாரம்.
விரிசடை வானவர் ஈசன் திரிபுரம்
போரிடை புக்கு சிரிப்பான் -- எரித்த
புகழதும் மால்கள்ள வேடம் கொடுபுத்தன்
மோகமெழு வித்த விளைவு!
அர்தநாரீஸ்வரன்.
தேவர்ப் பெரியமால் தோளில் வலம்கோவில்
மேவு திருவும் அக்கொப்பூழ் -- பூவில்
அணையும் அயனும் இடபால் உமையாள்
துணையும் திகழ்திருமால் மிக்கு!
ஸு கமுகா தம்ருதம் ஸ்வயம்.
வியாசர் பணித்தநல் பாகவதத் தாள்வேன்
புயல்நிற வண்ணன்நம் கண்ணன் -- முயலுமெனக்
கூறி விடைகொண்டான் தன்னுடைச் சோதி!
அறிவார்க் கதுஅவன் கோ யில்!
ஆழ்வாராக அவதாரம்.
காரி உடையநங்கை கோறித ஓர்வரம்
பாரில் தமக்கு மகனொருவன் --தாருமென
ஓவ ''பெரியன் '' எனவாய் அவாவியே
மேவினான் ஆதிநாதன் தான்!
இளையாழ்வாராக அவதாரம்.
தாமெல்லை என்றிருந்த பார்மன்னர் வீழ்ந்தவிய
மேனெல்லை பாரதத்தை ஆள்வித்தான்! -- தாளெல்லை
என்று தவத்தால்தம் மொப்பதோர் சேய்வேண்டத்
தோன்றும் இளையாழ்வார் என்று!
ஸு கமுகா தம்ருதம் ஸ்வயம்.
வியாசர் பணித்தநல் பாகவதத் தாள்வேன்
புயல்நிற வண்ணன்நம் கண்ணன் -- முயலுமெனக்
கூறி விடைகொண்டான் தன்னுடைச் சோதி!
அறிவார்க் கதுஅவன் கோ யில்!
ஆழ்வாராக அவதாரம்.
காரி உடையநங்கை கோறித ஓர்வரம்
பாரில் தமக்கு மகனொருவன் --தாருமென
ஓவ ''பெரியன் '' எனவாய் அவாவியே
மேவினான் ஆதிநாதன் தான்!
இளையாழ்வாராக அவதாரம்.
தாமெல்லை என்றிருந்த பார்மன்னர் வீழ்ந்தவிய
மேனெல்லை பாரதத்தை ஆள்வித்தான்! -- தாளெல்லை
என்று தவத்தால்தம் மொப்பதோர் சேய்வேண்டத்
தோன்றும் இளையாழ்வார் என்று!
--கி. ஸ்ரீர. ஸ்ரீ.
No comments:
Post a Comment