TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Tuesday, May 24, 2016
வேழமலைப் பெருமாள்.
Photo courtesy : Lakamsani Sgrao.
கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார்
நிச்சலும் நோற்றுகந்த தெய்வம்! அங் -- குச்சிமேல்
வழுவாது ஆலவட்ட நம்பி அளவளாவும்
வேழமலைத் தெய்வம் வணங்கு!
-- K S Srinivasan.
வையம் கண்ட வைகாசி கருடோத்சவம்.
Photo courtesy :
R
amaswamy Narayanan
கருளக் கொடியோன்! கருணை விழியோன்!
அருள்கை பொருட்டாய் கருடன் --சிரமேல்
வருகை தருவான்! அருள்மழை ஏற்று
இருகை உயர்த்தீர் இனிது!
--K S Srinivasan.
Friday, April 29, 2016
திருவஹிந்திரபுரம் மணவாள மாமுனிகள்.
Photo courtesy : Venugopalachari Gopi.
நாமுமினி நாநிலத்தே நன்குய்ய வந்துதித்த
மாமுனிகள் தொண்டாள் தவமுடையோர் -- தூமனத்தால்
தோத்திரம் செய்தெமை நோக்குவரேல் என்வினைஎம்
மாத்திரம்வை குந்தம்கைப் பட்டு!
-- K S Srinivsan.
ஸ்ரீ ரங்கராஜ மகிஷி.
Photo courtesy : Senkotai Sriram.
தானே தனதாள் முதல்நல்கி தன்கொழுனன்
வானே அருள இசைவித்து -- யானோ
இவற்கு எதுசெய்தோம் என்றெண்ணும் அன்னை
அவட்காகும் மாலே இணை !
--K S Srinivasan.
Friday, April 1, 2016
Thiruvellarai Senthaamarai Kannan.
Photo courtesy :
Adiyen Elaiyazhwar Ramanuja Dasa
n.
தெள்ளியார் கைதொழும் தேவனார் தென்திரு
வெள்ளரை பத்துமெட்டும் நாலுமைந்தும் -- மெள்ளக்
கடந்துசெந் தாமரைக் கண்ணன் கழலே
அடைவார் அடைவதூம் வீடு..
K S Srinivasan.
Panguni Uthiram Serthi.
Phto Courtesy :Venugopalachari Gopi, Thiruvitandai.
திருவே துணையாய் திருமால் சரணம்!
திரு நாடு தன்னில் இருவர் -- பொருட்டான
தொண்டாள் சிறப்பு நமக்காய் உதகிட
உண்டான பல்குனிநாள் போற்று!
--K S Srinivasan.
Sri Cheluvanarayanaswamy Wearing Vairamudi.
Photo Courtesy :
R
anganath Uttama Nambi Sn
புட்கொடி ஒன்றுடைய கோமான்தன் பொன்முடி
தட்டொளி போலமின்ன கண்முகப்பே -- சட்டென
காண எழிலாய் கலுழன்மேல் வந்தார் !
துணைவியார் சூழ விருந்து!!
--K S Srinivasan..
Tuesday, March 15, 2016
திருப்புட்குழி ராமர், வேணுகோபாலன் சாத்துப்படி.
Photo courtesy :
K
esavabashyam Vn
கொண்டை அழகுடன் மாதுளை நல்விறலில்
கொண்ட குழலும்கால் தண்டையில் -- மண்டிய
மாடும் நம்மனதை விட்டகலா ஈடும்
எடுப்பும் நினைதொரும்தித் திப்பு!
--K S Srinivasan.
Monday, March 7, 2016
தமிழ்த்தலைவனும் மாமுனிகளும் ஆதிகேசவப்பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருமயிலை
Photo courtesy :
Venugopalachari Gopi Adyabagham Thiruvidanthai
திருக்கண்டேன் என்று திருமாலை நேரில்
உருக்கண்ட கொண்ட தமிழ்த்தலைவன் --- கூறு
பனுவல் வழிமண வாளயோகி தாளே
தினமும் நினைவார் பழகு!
--K S Srinivasan.
Thursday, February 25, 2016
Sesha Vahanam - Masi Maham - Sri Parthasarathy Perumal purappadu.
Photo courtesy - Kanakaraj Kumar.
பரம்பரன்! பார்த்தன் பராத்பரன்! சேஷன்
புரத்த பரமபத நாதன்! -- சிறந்தநல்
தேவிமார் சேர்ந்திருபால் மேவி அருள்மாலை
நாவில் இறையேனும் கூவு!
K S Srinivasan.
Wednesday, February 24, 2016
ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் சமுத்திரத்தில் தீர்த்தம் சாதிக்கும் அற்புதமான காட்சி!!!
Photo courtesy: Kavalkezhani vinjimoor Srinivasan swamy
வங்கமா தண்புனல் வாருணி தாள்வருட
அங்கை சிறகாள் பறவைதான் -- தாங்கி
வருவான் ஒருவல்லித் தாமரை யாள்சேர்
திருமார்வன் மாசிமகத் தன்று!
K S Srinivasan.
சவரி ராஜன்
Photo courtesy :
Venugopalachari Gopi Adyabagham Thiruvidanthai
தருகை நீண்ட தயரதன் மகன்தான் இவனோ?
வருபுனல் மேகம் எனகூந்தல் முடியானோ?
திருந்தச் சமைத்த அணிமணி ஆடை அழகனார்
திருக்கண்ணபுரத் தம்மான் இவர்க்கெதிர் மற்றெவர்?
K S Srinivasan
திருக்குடந்தை ஸ்ரீ ஆதி வராஹர் சேஷ வாஹனம்
Photo courtesy :
Kesavabashyam Vn
தரணியாம் மங்கை தன்தொடைமேல் தாங்கி
அரவணைப் பாம்பு அவரிருவர் -- சேர
மடிமேல் அணைய அடியான் எமக்காய்
தேடுமால் வீதிவாய் நின்று.
K S Srinivasan
ஸ்ரீ பெரருளாளனுடன் ஸ்ரீ திருக்கச்சிநம்பிகள்.
Photo courtesy :
Kesavabashyam Vn
வாஞ்சை யுடனேநம் கச்சிக்கு வாய்த்தானும்
தீஞ்சொல் நாலிரண்டு பேசுமொழி -- விஞ்ச
உரைத்தவர் வாய்இளையாழ் வார்குறை தீர்த்தான்
நிறைஞான தேவகுரு வாழ்த்து!
K S Srinivasan
பிரணவத்தின் வெளிப்பாடு. அகாரம் - தியாகேசன். உகாரம் - அந்தரங்கர். மகாரம் -வைதிகோத்தமர்
Photo courtesy :
Ananthanpillai Kunnavakkam Varadharajan
ஆதியில் ஆங்கவரை அடவியுள் காத்தான்!
பாதியில் ஆறு வார்த்தை இவரால் மொழிந்தான்!
மீதியைத் தானே உரைப்ப லோககுருவாய்ப் போந்தான்!
வேதத்தின் உச்சியான் தேவாதி தேவன் இவனே!
K S Srinivasan
அமுதன் வெள்ளி கருடன், திருக்குடந்தை.
Photo courtesy :
Kesavabashyam Vn
கிடந்தது நாகணைமேல்! போந்தது கலுழன்மேல்!
நடந்தது ஞாலத்துள்! நின்றதென் இதயத்தே!
குடந்தைக் கிடந்தான் அடியே துணையாய்
அடைந்தேன்! அவனெனை ஆட்கொளுமாறே!
K S Srinivasan
Monday, February 8, 2016
The Divine Union.
Photo courtesey : Kazhiyur Varadhan.
காவிரிதான் அந்த விரஜையோ? மேன்வைகு
கோவில் அரங்கம் பரம்பதமோ? -- தேவன்
பரவாசு தேவன்தான் நம்அரங்கன் ஆமால்
பரமபதம் இங்கலால் எங்கு?
--கி.ஸ்ரீர. ஸ்ரீ.
Thursday, January 21, 2016
திரு மெய்யம் .
Photo courtesy - Sujatha Rana.
மையோ? மழைமுகிலோ? மாய மயக்கோகொல் ?
பைநாகத் துப்பள்ளி கொண்டவெம் -- ஐயவோ!என்
ஐயப்படா நின்ற உலகோர்கள் மெய்யுணர்
செய்கோல மெய்யத் திறை!.
Friday, January 1, 2016
ரங்க ரங்காதரங்க லாலித பாதயுகளா!
அங்க அங்காலலித லதாங்க மோகனரூபா!!
மந்த மந்த ஹஸிதாம்புஜ ஸுந்தர வதநா!
இந்திரா ஸுந்தரி ரஞ்சந பர்யங்க சயநா!!
ஆழ்வார் திருவடி தொழுநாள்.
Photo courtesy - Kesvabashyam Vn
கடலெழுந்த மேகம் மழைஎன மீள
கடல்சேர்தல் போலா இணைத்தாள் -- வடிவாம்
சடகோபர் வாய்த்த திருத்தாள் தொழுநாள்
அடியார் விதையும்விண் மீது !.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)