Monday, August 31, 2015

அமிர்தவல்லித் தாயார், திருவேளுக்கை.


 

  பாலாய்! அமுதாய்! அமுதத் தெழுசாரு
போலாம் அழகன் திருமார் பின் -- பாலே
உனதிடம் தேவி! அமிர்தவல்லித் தாயே!
மனத்திடம் மேவி அருள்!

 

--கி. ஸ்ரீ. ஸ்ரீ.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்.

 

தனக்கெதிர் தானேயாம்! மற்றெவர்? என்று
தனக்கிழத்தி சென்று தவம்செய் -- தனித்தலம்
தங்கும்திரு நின்றவிடம் நாரணனும் அங்குசென்று
மங்கலமாய் ஆற்றும் மணம்!

--கி. ஸ்ரீ. ஸ்ரீ.

ஸ்ரீ பார்த்தசாரதி, ஆவணிஅவிட்டம் புறப்பாடு.



நிமிர்ந்து பரந்த திருத்தோளும்! தேர்மேல்
அமர்ந்து பரியை உழற்றக் -- கமைந்தகைக்
கோலும்! திருத்தாளும்! அஞ்சலென்ன கைஇவை
நாலும்ஆம் தஞ்சம் நமக்கு!

-- K S Srinivasan.

Friday, August 28, 2015

திருக் குறுங்குடி வைஷ்ணவ நம்பி.




நம்பி சரண்நமக்கே நாளும் நலமாதல்
நம்பி சரண்எனுமே! வைட்ணவ -- நம்பி
குறுங்குடிக்காய் கூம்புககை! ஏற்றுகவாய்! தாழ்த்த
சிரம்,அடுத் தாம்பிறவி மாய்த்து!

--K S Srinivasan.

ஆதிநாதன், திருக்குருகை


 Alwarthirunagari Temple

ஆதிநாதன் பாதம் அனுதினம் பணிந்துநாம்
வேதகீத நல்வாய் மொழி ப் புலவன் -- நீதியோதி
நின்றோம்! நலமந்தம் இல்லதோர் வான்நாடு
நன்று நமக்கன்றி யார்க்கு?

--K S Ssrinivasan.

கச்சிக் கரிகிரி வரதன்.

 
 
 
கரிவரத! கச்சிக் கரிகிரி உச்சி வரத!
புரமெரிசெய் பொன்னன் அரனும் -- சிரம்திசைக்
கோர்நான்கும்  தாங்கு மயனும் ஏற்றநின்ற
தோர்பாங்கும்  என்பேச்சால் ஏச்சு!

--K S Srinivasan.


வாமன ஜெயந்தி - உலகளந்தப் பெருமாள் காஞ்சி.

மாவலியை ஓர்காலால் கீழுலகுக் கோட்டிமறு
தாவில் உலகம்மேல் ஏழவையும் -- மேவிக்கை
இரண்டும் திசைஎட்டும் தட்டதிரு வோணத்தான்
பாரில் பதித்தநாளைப் போற்று.

K S Srinivasan.

Thursday, August 27, 2015

திருப்பாணாழ்வார், உறையூர்.




கார்த்திகையில் நல்ல உரோகிணிநாள் தோன்றியே
பார்புகழ் பண்சேர் அமலனாதி -- நேர்திசைத்த
வள்ளலே! தென்னரங்கர் பூண்மார்பில் கௌதுபமே!
வெள்குவேன் எம்மைநின் கூட்டு!
K S Srinivasan.

சார்ங்கவில் சேவகன், கும்பகோணம்.




உய்யக்கொள் மாய மயக்குகள் கற்றதெற்றோ?
மைய்யல்வாய் நோயதாய் ஐய!நின் -- செய்யகோலம்
என்னேஎம் ஆவி புகுந்தழிக் கின்றது
சொன்னால் பசியன்காண் சோறு!

K S Srinivasan.

திருப்புட்குழி வீரராகவன் நாச்சியார் கோலம்.




தன்னால் ஆகது ஏதிலையாய் முன்னொருநாள்
தன்பொருட்டு இன்னுயிரை தந்தனனே -- என்றுநீ
புள்ளுக்குத் தாய்போல் இரங்கினை ஏற்பதால்
கொள்ளை அழகவள்போல் அன்று!

KS Srinivasan.

Wednesday, August 26, 2015

ஏகாதசி புறப்பாடு, திருவல்லிக்கேணி.




ஏகாதசி விரததினே விஷ்ணுர் 
நாமக்  கிரகணம் பாவனம் |
துவாதசி பாரணாத் பிராம்மண
பக்ஷ்ய உச்சிஷ்டம் ஸுபாவனம் ||

ஏதத் கசிதம் கார்யம் நாராயண
பராயணோர்  ஸேவையா ஸுக்தம்  : |
தத் சித்திகரம் தேவம் பலம் விஸுர்ஜ்ய
புநர்ப்பிரார்தயா மஹ ||

திருவஹிந்திரபுரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.





மீள்கை விரும் பா உலகிதில் எம்மைநீர்
ஆள்கை விரும் பி அவதரித்தீர்! -- கொள்கை
குறி ப் பு உமக்கதாயின் மாமுனியே! முன்னம்
குறி ப் பீர் அடியேனைத் தொண்டு!

ஸ்ரீ பச்சைவண்ணர், விஷ்ணு காஞ்சி.




 
நச்சுவார் எச்சப் படாப்பொருளே! நின்வண்ணம்
பச்சைப் பசும்பொன்னோ? காரேய்ப்ப -- மெச்சப்
படும்மிக மையோதான்? இச்சையாய்க் கேட்க்கின்றேன்
விடுஎன்முன் தோன்றி விடை!


காஞ்சி தேவப்பெருமாள் ஏகாந்த சேவை.


வரத! உனக்கிது என்தகுமோ? முன்கை
வரம்தர வைத்துபின் கைமேல் -- எரிகனல்
சக்கரம் ஏதுக்கோ? அஞ்சுவேனும் பால்அணைய
அக்கை மறைத்தருள்கை தா!


Tuesday, August 25, 2015

ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள், கூரம்.

 
 
கேசவா! நின்புகழ் என்வா யதோ?சொல்
நேசனே ! வாசவார் பூங்குழலி -- ஈசனும்
நாள்மலர் மேல்அயனும் கூசம்செய் யாதேநின் 
தாள்மலர் தாழ்த்தல் இயைந்து!





திருவேளுக்கை, காஞ்சி.

வேளுக்கை ஆளரியை நாளும் தொழுதெழ
தோளுக்கும், தோளின்மேல் தோன்றும் -- அணங்குக்கும்
தாளுக்கும் தன்நேர் இலாமுடிக்கும் ஆளும்
துளசிபோல் ஆகதோஎன் நெஞ்சு!

 

விளக்கொளி எம்பெருமான், திருத்தண்கா (காஞ்சி).

விளக்கொளியை! பொன்வேய் மரதகத்தை! துப்பார்
துளக்கமில் ஆரமுதை! நாயேன் -- உளத்துறை
தண்காவில் ஒண்மாலை! தண்மதியை! தாரகையை!
எண்குற்றார் இல்லை இடர்.


 

ஸ்ரீ சத்யமூர்த்திப் பெருமாள் திருமெய்யம்.

மெய்ய மலையை! சொல்செய்கை பொய்கலா
அய்யனை! தூய்நெறிக்கண் எய்துவார் -- செய்தவத்த
தோர்பயனை! தக்கார் தெளியத் திகழ்ஞானத்
ஊர்உம்பனை! நம்பல் நலம்.

 

திருக்கூடல் வையம்காத்த எம்பெருமான்.

வையம் முழுதும் வயிற்றடக்கி முன்காத்து
பையஅவை உய்ய வெளிப்படுத்தாய் -- ஐய!தேவர்
பலர்கூடி ஏத்துயர் நாயக!என் ஊழை
உலப்பி உனதடிக்காய்க் கூட்டு!
 


வையம் முழுதும் வயிற்றடக்கி முன்காத்து
பையஅவை உய்ய வெளிப்படுத்தாய் -- ஐய!கூடல்
கோழிக்  குடையஎம் நாயக! ஏழையேன்
ஊழைக்  கழித்துன்பால் ஆற்று!










திருக்கோளூரின் வைத்தமாநிதிப் பெருமான்.




முன்பிறப்பால் மூள்வினை வைத்த முளைநெல்போல்
என்பிறப்பு ஆற்ற முதலாமோ ? -- மன்பிறப்பு
மாற்றல் மதியுடையீர் சேரும்  திருக்கோளூர்
ஏற்ற முடைத்ததோர் வைப்பு!

Saturday, August 22, 2015

கீதாசாரியனும், ஜகதாசாரியனும்.



கீதாசாரியனும், ஜகதாசாரியனும். 

தேர்ப் பாகனார் உகந்த வாதப்போர் பாகனார் -
சேர்த்திசைந்த நம்மின் வினைக்கோர்
ஆர்ப்பழி - தீயில்பொறி சக்கரக் கையினார்.
வேர்ப்பற்றாய் தாட்பற்ற நமக்கோர் வாள்முதலே!

K S Srinivasan

Friday, August 21, 2015

ஆண்டாள் திருவாடிப் பூரம் 7ஆம் நாள் உற்சவம் :




பாற்கடல் பள்ளிஎன் தாழ்த்ததோ ? பாரின்மேல் நாற்றிசையும்
நோற்றுயர் கௌசிகன் பள்ளி உணர்த்த கண்ணுற்றீர் அஃதும்
ஆற்றலம் பொய்யுறக்கம் தொடர்தர  ஐயநீர்! உற்றுப்
பெற்றது நற்றவள் நம்அன்னை! கோதைதன் மடியிறே !

 

அருள்வடிவாம் நிறைவடிவே!
திருவுடைப் பெருமாளே!
குறைஉடை சிறுவடியேன்
பெறவிழைஉம் திருவடியே!

 

பெரியாழ்வார் நந்தவனக் கிளியே!
தெரியேன் வினைஅறவே களைவாயே!
வரியே னுக்அருள் செயவே!போய்
உரித்தாய் மொழிஅவள் கைகிளியே!