Friday, November 6, 2015

தீர்த்த பேரர், ஸ்ரீரங்கம்.



Photo courtesy - Vakulabaranan Kesavan.

மஞ்சன மாட்டுநல் மேனிப் பிரானே!நின்
அஞ்சன நெற்றித் திலகமும் -- கொஞ்சிளம்
புன்நகையும் சக்கரம் தண்டு கதையுமே
என்நெஞ் சகலா வடிவு.

-- K S Srinivasan. 

திருக்குளந்தை மாயக்கூத்தன், நவ திருப்பதி.




Photo courtesy - Prasanna Srinivasan.

கிடந்தெழா இக்கிடக்கை என்னோ குடந்தை
இடமா உடைமாயா? எம்போல் -- திடமா
செயல்படாத் தாழ்த்த திகைப்பா? அடிபால் 
முயல்கை விடுமேல்யார் காப்பு?

--K S Srinivasan. 

தண்ணளி மாமுநி.


Photo courtesy - Narasimhan Sampathkumar.

தீர்க்க நேத்ரம்! ஸ்மிதபாஜந விகஸித நீரஜாதரம்!
மார்தவ புளகித பாகுதண்டம்! பவ்ய ஸுகுணோ பேரம்!!
அர்ப்பித யக்ஞ சூத்ரம்! சிந்முத்ரா விலஸத்ஸோபித வேஷம்!
கீர்த்தயேஹம் நௌமிஸௌம்யவர முநிநா வாரிஜபாத யுக்மம்!!


--கி. ஸ்ரீர. ஸ்ரீநிவாச தாஸன்.

Thursday, November 5, 2015

அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான் -- (தென்னேரி) அகரம் சன்னதியில்.



அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான் -- (தென்னேரி) அகரம் சன்னதியில்.

Photo courtesy - Kesavabashyam Vn.

ஏணி இன்றி கொடிபூ சணியைமுன்  கூரைமேல்
பூணுவார் உண்டோ?இம் மன்னா -- மனிசரை
மாகவை குந்தமேற்றல் ராமா னுசனுக்கு
ஆகலென்னே என்றறிந்தார் உய்ந்து!

--K S Srinivasan.

Wednesday, November 4, 2015

நாகை அழகியார்.



Photo courtesy - Kesavabashyam Vn.

அழகா! அமுதா! செலுவத் திருவாழ்
எழிலா! பழவேழ் மொழியுள் -- செழுமென்
தமிழால் தினம்யான் மொழிய வருவாய்
குழகா! பொருள்சீர் பொதிந்து!

--K S Srinivasan. 

Tuesday, November 3, 2015

வரதனும் பெரும்தேவியும் .




Photo courtesy - Venkat Kannan.

ஆயியும் அப்பனும் அம்ம எமக்கருள,
தாயினும் சாலப் பரிந்துதம்--கோயில்
அகன்று இருவராய் வந்தார்! இதயம்
புகுதப்போந்தார்! உய்யாலை ஆட்டு!

--K S Srinivasan. 

நாகை அழகியார், ஊஞ்சல் சேவை.




Photo courtesy - Kesavabashyam Vn.

மனமெனும் ஊஞ்சற்கண் மாசில வாகின்
தினமதில் தெய்வம் குடிபுகு -- வானென
தூய்மைசேர் ஞானத் துறைபடிந் தாடிநல்
வாய்மையோ டாகல் கடன் !

--K S Srinivasan. 








Monday, November 2, 2015

சூரி வணக்கம்.

கருளப் பெருமாள்.

வைனதேயம் வர புஜ வரதம் பட்சிராஜம் பஜே !
தீனஜன சுக்ருதம் தேவகுல ஜாதம் யதாஸ்வயம்  !!
மன்யே தவ நிஜ ரூபம் விஷ்ணு போதம் ! வரதாயகம் !
தன்ய தன்ய ப்ரசீத மம ! அம்ருத பாஜன தராம் !!

ஆழிப்படையானுக்கு வாழி.

வாழி! வாழி! ஆழி அண்ணரே!
ஏழை எம்மை காப்பவர் நீரே!
தோழமைக் கொள்ள சூழுமென் எண்ணம்!
நாழிகை நில்லாது அதுமாறல் முன்னம்!

மாலவன் கையில் நாளும் துலங்கும்
கோல வண்ண ஆழி அண்ணா!
மேலும் மேலும் எந்தன் எண்ணம்
மாலின் பாலே குழைதல்  வேண்டும்!

தீக்கொளச் சுழலும் சக்கரத்து ஐய!
மாக்களென விலக்காது மங்களம் செய்வீர்!
ஆக்கை முழுதும் இழிதல் திரித்து
நோக்கும் எமைநீர் மும்மைசால் மீட்டு !

திக்கு நிறைப் புகழாளா! தேவா!
அக்கரை உமக்கும் இதுகொல் ஆகாதா?
சக்கர நல்வடி வழகா! சாமா!
எக்காளம் ஊதி ஏற்றுகேன் நும்புகழ்!

சங்கத தாழ்வார்நும் தோழர் ! தங்குமால்
மங்கள முடியும் தோளும் எல்லாம்
திங்கள்வெண் பரிதிவான் திசையுமாம் ! திகிரி
எங்கோ!அம் மாலடிமை நும்போல் நல்குதிரே!

 நிருஸிம்ம ஸ்தோத்ரம் . 

 நச்சு நாரணனை அச்சுதனை!
இச்சகத்து இணைஇலானை !
மெச்ச மகிழ்வானை என் மாலவனை !
எச்சில்வாய்க்  கொண்டு ஏத்தினேனே!.  -1

கற்ற கல்வி இற்றெனப் பற்றி
உற்ற போது உரப்ப உணர்த்தலும்
நிற்ற தூண் பிளந்த இரணியன்
முற்றும் வகைச் செற்ற வென்னப்பனே!   -2

நாழிகை இதுவது என்றிலாது
வாழும் வகை வரம் வேண்டி
ஆழியானைப் பழிகொள விழைவானை
போழ்த்தானை பொழுதும் புலற்றுவனே.  -3.

நாராயணா ! என்ற நின்நாமம் ஓத
யாரானும் தடிந்து தண்டிப்பரோ ? அஃதால்
நேராதன செய்தான் என்மகன்  எனவே
ஓராதவனை ஓய்த்தானை நாளும் ஒழுகு.  -4.

கல்லெனச் சமைந்தானைக்  காணல் திறமோ ?
சொல்லில் சுருதியுள் சொல்லப் படுமவனை
இல்லை எனஇயற்றுவார் இருளடங்க முன்பு நீ
கல்லினில் தோற்றவும் ஆற்றுமோ பிணக்கினி ?  -5

கானிடைக் கல்லதன் எறிந்தும், கைமா
ஆனுடைக் காலதால் இடர்ந்தும், ஆய்ந்த
கனலிடைக் காய்ப்பவும்,நாளும்  நாமம்
 நினதுடைப் பிள்ளையை பிள்ளை எனலாமே?   -6

கள்ள உள்ளத்து இரணியனைக் காய
வெள்ள வெள்ளத்து அரிதுயில் அகன்றனை!
எள்ளித் தள்ள  வந்தானை தம்பத்தும்
துள்ளி அள்ளம் செய்து அட்டனை அரியே!.  -7

நின்ற நெடுந்தூண் நில்லா துதிர
மன்றில் மார்தட்டித்  தூண் தொட்ட
ஞான்று, இரணியன் உளம் தொட்டுக்
கன்றிய கைக்கபயம் அவன்கால் பணிவார்க்கே!.  -8

பிள்ளைவாய்  அமுதத்தேறல் நின்நாமம் விடமென்றான
உள்ளம்தொட்டு இரணியன் உயிரை உண்டாய் !
கள்ளமுன் செய்கை! காயுமுன்நாமம் நோயதாமோ?
தெள்ளியசிங்கா ! தெளிகிற்கேன் தண்டனையும் அருளதாலோ?   -9

அல்லில்கேணிக் கண்ணனை !  ஆழி கொண்டு 
துல்லியம் போதில் துரகம் துளைத்தானை!
வில்லின் வலவன் ராமனை! நாகசயனைச்
சொல்லும் போதும் நரசிங்கா! என்பேனே.  -10

கீதாசாரியனும், ஜகதாசாரியனும். 

தேர்ப் பாகனார் உகந்த வாதப்போர் பாகனார் -
சேர்த்திசைந்த நம்மின் வினைக்கோர்
ஆர்ப்பழி - தீயில்பொறி சக்கரக் கையினார்.
வேர்ப்பற்றாய் தாட்பற்ற நமக்கோர் வாள்முதலே!

 இராமானுஜ விஜயம்.

பரவாசுதேவன் பணித்தார் எனப்பாரின்மேல் வந்தார்
                பூதலத்தார் பொறைதீர பூதூரில் பிறந்தார் வந்தார்
அரவரசன் அனந்தன் என்பார் அங்குற்றிங்கு வந்தார்
               ஆளவந்தார் அருள்விழிக்கு இலக்காகி உலகாள  வந்தார்
கரிகிரிமேல் கண்ணாளர் ஆதரித்தன்பு செய்வார் வந்தார்
               காசினியோர்க்கு ''மால்தேய்வம்'' எனக்காட்டவே வந்தார்
திருவரங்கம் திருப்பதி சேர்ந்தினிது இருபார் வந்தார்
               திருமால் திருவடிக்கெமை சேர்விப்பார் வந்தார் தாமே!

தண்ணளி மாமுநி.

தீர்க்க நேத்ரம்! ஸ்மிதபாஜந விகஸித நீரஜாதரம்!
மார்தவ புளகித பாகுதண்டம்! பவ்ய ஸுகுணோ பேரம்!!
அர்ப்பித யக்ஞ சூத்ரம்! சிந்முத்ரா விலஸத்ஸோபித வேஷம்! 
கீர்த்தயேஹம் நௌமிஸௌம்யவர முநி சரணயோர் த்வந்தம்!!

 ஆண்டாளும் அரங்கனும்.

பாற்கடல் பள்ளிஎன் தாழ்த்ததோ ? பாரின்மேல் நாற்றிசையும்
நோற்றுயர் கௌசிகன் பள்ளி உணர்த்த கண்ணுற்றீர் அஃதா 
ஆற்றலம் பொய்யுறக்கம் தொடர்தர  ஐயநீர்! உற்றுப்
பெற்றது நற்றவள் நம்அன்னை! கோதைதன் மடியிறே !

அருள்வடிவாம் நிறைவடிவே!
திருவுடைப் பெருமாளே!
குறைஉடை சிறுவடியேன்
பெறவிழைஉம் திருவடியே!

பெரியாழ்வார் நந்தவனக் கிளியே!
தெரியேன் வினைஅறவே களைவாயே!
வறியே னுக்அருள் செயவே!போய்
உரித்தாய் மொழிஅவள் கைகிளியே!


பேரரு ளாளன்பே ரோதும் பெரியீரே!
சீராரும் கச்சித் திருவாளன் -- ஓரோர்
பொழுது திருச்சாத்தும் நாளும்நீர் நல்கல்
எழுது பொற்சித்திரம்நெஞ் சத்து!

தேவப்பெருமாள், கோடாலிக் கொண்டை

அன்னை அவளருள் நோக்கதும் ''எற்றேனும்
சொன்னேன் உனக்காகது'' என்வர்தாம் -- இன்னிவன்
கோடலி கொண்டை அழகுகண் டோவுவர்
ஈடுண்டோ அன்னாள் குழல் ?
 
ரங்கா தரங்கம் :

ரங்க ரங்காதரங்க லாலித பாதயுகளா!
அங்க அங்காலலித லதாங்க மோகனரூபா!!
மந்த மந்த ஹஸிதாம்புஜ ஸுந்தர வதநா!
இந்திரா ஸுந்தரி ரஞ்சித பர்யங்க சயநா!!




பூதத்தாழ்வார், திருக்கடல் மல்லை.



Photo courtesy - Kesavabashyam Vn.

கனைகடல் ஒதமும், காற்றும், கதிரும்
வனப்புடை சிற்பம்கொள் மல்லைப்   -- புனைக்குடைக் 
கோயிலும் கொண்ட தலசயனத் தெம்இறையை 
வாயில்வை பூதத்தார் போற்று.

--K S Srinivasan.

யதோக்தகாரி பெருமாள், காஞ்சீபுரம்.



Photo courtesy - Kesavabashyam Vn.

தன்னைப்போல் தன்னின் தமரைதம் நெஞ்சத்து
உன்னி உவந்திருப்பார் யார்,அவர் -- சொன்னசொல்
வண்ணம் நடந்தமால் எண்ணம் பிழையாமே 
மண்ணில் மதிப்ப நட.

-- K S Srinivasan. 

Sunday, November 1, 2015

பேயாழ்வார் அருளிப்பாடு.



photo courtesy - Sarathy Bhattat, Mylai.

முதல்மூவர் நெற்றிகண் தேர்ந்த அதரமாம்!
மோத மழிசை இதயமாய்! -- வேதியார்!
பாண்தொண்டர்! கோன்குல சேகரன்! வேல்கலியன்!
பூண்பொறியாம் மாறன் அவர்க்கு!

--K S Srinivasan. 

அரங்கநகர் அப்பன்.



Photo courtesy - Flute Master Ravi Sundaram.

அருள்கண்ணும் ஆங்கே தருகையும் காட்டும்
பெருமானே! ஏனோ திருவடியை -- தாரா
தொளித்தாய்சொல்! தக்கார் அவர்க்கே உரித்தோ?
எளியேற்கும் ஆக்கும் இறை!

-- K S Srinivasan. 

என்னைப் பெற்ற தாயார், திருநின்றவூர்.



Photo courtesy - Anitha Balan.

பிறந்ததால் புண்ணியம் ஏது மிலேன்யான்!
சிறந்தஉன் நோக்குண்டேல் உய்யப் -- பெறுவேனாய்
சன்மம் கடைக்கொளுவேன்! தாயே! அருளுமம்மா!
உன்போல் உதவுவார் உண்டோ?

-- K S Srinivasan. 

''பாஹுச் சாயாப்யாம்''



Photo courtesy - Kesavabashyam Vn.

ஒருகுடைக் கீழ்தாயா ரோடிருந்தாய்! குன்று
பெரும்குடையாய்த் தாங்கி இடையர் -- திரள்காத்தாய்!
நாரா அயன எனும்பெயரில் யானும்தான்

சேரேனோ? கட்டுரைஎங் கோ!


-- K S Srinivasan.