Friday, April 29, 2016

திருவஹிந்திரபுரம் மணவாள மாமுனிகள்.



Photo courtesy : Venugopalachari Gopi.

நாமுமினி நாநிலத்தே நன்குய்ய வந்துதித்த
மாமுனிகள் தொண்டாள் தவமுடையோர் -- தூமனத்தால்
தோத்திரம் செய்தெமை நோக்குவரேல் என்வினைஎம்
மாத்திரம்வை குந்தம்கைப் பட்டு!

-- K S Srinivsan.



ஸ்ரீ ரங்கராஜ மகிஷி.



Photo courtesy : Senkotai Sriram.

தானே தனதாள் முதல்நல்கி தன்கொழுனன்
வானே அருள இசைவித்து -- யானோ
இவற்கு எதுசெய்தோம் என்றெண்ணும் அன்னை
அவட்காகும்  மாலே இணை !

--K S Srinivasan.



Friday, April 1, 2016

Thiruvellarai Senthaamarai Kannan.



Photo courtesy :

தெள்ளியார் கைதொழும் தேவனார் தென்திரு 
வெள்ளரை பத்துமெட்டும் நாலுமைந்தும் -- மெள்ளக் 
கடந்துசெந் தாமரைக் கண்ணன் கழலே 
அடைவார் அடைவதூம் வீடு..

K S Srinivasan.

Panguni Uthiram Serthi.



Phto Courtesy :Venugopalachari Gopi, Thiruvitandai.

திருவே துணையாய் திருமால் சரணம்!
திரு நாடு தன்னில் இருவர் -- பொருட்டான
தொண்டாள் சிறப்பு நமக்காய் உதகிட 
உண்டான பல்குனிநாள் போற்று!

--K S Srinivasan.

Sri Cheluvanarayanaswamy Wearing Vairamudi.



Photo Courtesy :


புட்கொடி ஒன்றுடைய கோமான்தன் பொன்முடி 
தட்டொளி போலமின்ன கண்முகப்பே -- சட்டென 
காண எழிலாய் கலுழன்மேல் வந்தார் !
துணைவியார் சூழ விருந்து!!

--K S Srinivasan..