Monday, July 27, 2015

ஆழிப்படையானுக்கு வாழி.




Photo courtesy : Vijayaraghavan Ke.

வாழி! வாழி! ஆழி அண்ணரே!
ஏழை எம்மை காப்பீர் நீரே!
தோழமைக் கொள்ள சூழுமென் எண்ணம்!
நாழிகை நில்லாது ஏங்குமவ் வண்ணம்!


மாலவன் கையில் நாளும் துலங்கும்
கோல வண்ண ஆழி அண்ணா!
மேலும் மேலும் எந்தன் எண்ணம்
மாலின் பாலே குழைய உதவீரே !


தீக்கொளச் சுழலும் சக்கரத்து ஐய!
மாக்களாய் விலக்காது மங்களம் செய்வாய்!
ஆக்கை முழுதம் இழிதல் திரித்து
நோக்கும் எம்மை முமைசால் மீட்டே!


திக்கு நிறைப் புகழாளா! தேவா!
அக்கரை உமக்கும் இதுகொல் ஆகாதா?
சக்கர நல்வடி வழகா! சாமா!
எக்காளம் ஊதி ஏற்றுகேன்! அருளுமம்மா!


சங்கர் ஐயர்நும் தோழர் ! தாங்குமால்
மங்கள முடியும் தோளும் எல்லாம்
திங்கள்வெண் பரிதிவான் திசையுமாம் ! திகிரி
எங்கோ!அம் மாலடிமை நும்போல் நல்குதிரே!

--கி. ஸ்ரீர. ஸ்ரீ.









No comments:

Post a Comment