TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Saturday, April 14, 2018
மல்லீச்சர வேங்கட வாணன்
பேதை பாலகர் பத்தர் பித்தர் ஈதிவர் போதரேலும்
ஓதிய மறைவாணர் வேத நாயகன் தான் விரும்பி
வீதியார வருவானை மல்லீச்சர வேங்கட வாணனை
ஆதியை அன்பனைப் பெற்றினிப் புறத்திருப்பாரே?
Tuesday, May 24, 2016
வேழமலைப் பெருமாள்.
Photo courtesy : Lakamsani Sgrao.
கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார்
நிச்சலும் நோற்றுகந்த தெய்வம்! அங் -- குச்சிமேல்
வழுவாது ஆலவட்ட நம்பி அளவளாவும்
வேழமலைத் தெய்வம் வணங்கு!
-- K S Srinivasan.
வையம் கண்ட வைகாசி கருடோத்சவம்.
Photo courtesy :
R
amaswamy Narayanan
கருளக் கொடியோன்! கருணை விழியோன்!
அருள்கை பொருட்டாய் கருடன் --சிரமேல்
வருகை தருவான்! அருள்மழை ஏற்று
இருகை உயர்த்தீர் இனிது!
--K S Srinivasan.
Friday, April 29, 2016
திருவஹிந்திரபுரம் மணவாள மாமுனிகள்.
Photo courtesy : Venugopalachari Gopi.
நாமுமினி நாநிலத்தே நன்குய்ய வந்துதித்த
மாமுனிகள் தொண்டாள் தவமுடையோர் -- தூமனத்தால்
தோத்திரம் செய்தெமை நோக்குவரேல் என்வினைஎம்
மாத்திரம்வை குந்தம்கைப் பட்டு!
-- K S Srinivsan.
ஸ்ரீ ரங்கராஜ மகிஷி.
Photo courtesy : Senkotai Sriram.
தானே தனதாள் முதல்நல்கி தன்கொழுனன்
வானே அருள இசைவித்து -- யானோ
இவற்கு எதுசெய்தோம் என்றெண்ணும் அன்னை
அவட்காகும் மாலே இணை !
--K S Srinivasan.
Friday, April 1, 2016
Thiruvellarai Senthaamarai Kannan.
Photo courtesy :
Adiyen Elaiyazhwar Ramanuja Dasa
n.
தெள்ளியார் கைதொழும் தேவனார் தென்திரு
வெள்ளரை பத்துமெட்டும் நாலுமைந்தும் -- மெள்ளக்
கடந்துசெந் தாமரைக் கண்ணன் கழலே
அடைவார் அடைவதூம் வீடு..
K S Srinivasan.
Panguni Uthiram Serthi.
Phto Courtesy :Venugopalachari Gopi, Thiruvitandai.
திருவே துணையாய் திருமால் சரணம்!
திரு நாடு தன்னில் இருவர் -- பொருட்டான
தொண்டாள் சிறப்பு நமக்காய் உதகிட
உண்டான பல்குனிநாள் போற்று!
--K S Srinivasan.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)