Saturday, April 14, 2018

மல்லீச்சர வேங்கட வாணன்


பேதை பாலகர் பத்தர் பித்தர் ஈதிவர் போதரேலும் 
ஓதிய மறைவாணர் வேத நாயகன் தான் விரும்பி  
வீதியார வருவானை மல்லீச்சர வேங்கட வாணனை 
ஆதியை அன்பனைப் பெற்றினிப் புறத்திருப்பாரே?

Image may contain: 5 people, including Tondanur Nambi, indoor

Tuesday, May 24, 2016

வேழமலைப் பெருமாள்.




Photo courtesy : Lakamsani Sgrao.

கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார் 
நிச்சலும் நோற்றுகந்த தெய்வம்! அங் -- குச்சிமேல் 
வழுவாது ஆலவட்ட நம்பி அளவளாவும் 
வேழமலைத் தெய்வம் வணங்கு!

-- K S Srinivasan. 

வையம் கண்ட வைகாசி கருடோத்சவம்.



Photo courtesy :  



கருளக் கொடியோன்! கருணை விழியோன்! 
அருள்கை பொருட்டாய் கருடன் --சிரமேல் 
வருகை தருவான்! அருள்மழை ஏற்று 
இருகை உயர்த்தீர் இனிது!

--K S Srinivasan. 

Friday, April 29, 2016

திருவஹிந்திரபுரம் மணவாள மாமுனிகள்.



Photo courtesy : Venugopalachari Gopi.

நாமுமினி நாநிலத்தே நன்குய்ய வந்துதித்த
மாமுனிகள் தொண்டாள் தவமுடையோர் -- தூமனத்தால்
தோத்திரம் செய்தெமை நோக்குவரேல் என்வினைஎம்
மாத்திரம்வை குந்தம்கைப் பட்டு!

-- K S Srinivsan.



ஸ்ரீ ரங்கராஜ மகிஷி.



Photo courtesy : Senkotai Sriram.

தானே தனதாள் முதல்நல்கி தன்கொழுனன்
வானே அருள இசைவித்து -- யானோ
இவற்கு எதுசெய்தோம் என்றெண்ணும் அன்னை
அவட்காகும்  மாலே இணை !

--K S Srinivasan.



Friday, April 1, 2016

Thiruvellarai Senthaamarai Kannan.



Photo courtesy :

தெள்ளியார் கைதொழும் தேவனார் தென்திரு 
வெள்ளரை பத்துமெட்டும் நாலுமைந்தும் -- மெள்ளக் 
கடந்துசெந் தாமரைக் கண்ணன் கழலே 
அடைவார் அடைவதூம் வீடு..

K S Srinivasan.

Panguni Uthiram Serthi.



Phto Courtesy :Venugopalachari Gopi, Thiruvitandai.

திருவே துணையாய் திருமால் சரணம்!
திரு நாடு தன்னில் இருவர் -- பொருட்டான
தொண்டாள் சிறப்பு நமக்காய் உதகிட 
உண்டான பல்குனிநாள் போற்று!

--K S Srinivasan.